Wednesday, November 2, 2011

காலாவதியான தாய்

ஊருக்கு வெளியில் எந்தவித நவீன ஆர்பாட்டங்களும் இல்லாத மௌனம். பச்சை பசேலென தோட்டங்கள்.இவைகளை பார்த்தாலே மனம் ஊமையாகிவிடும்.அதுவும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு கேட்கவா வேண்டும்.

தொலைபேசி ஒலி அழைத்து கொண்டிருந்தது. ரிசீவரை எடுத்த முதியோர் இல்ல மேலாளர்,சிறிது நேரம் கழித்து பேசுங்கள் என்றாள்.
லலிதா ன்னா யாரு? அவங்களுக்கு போன் வந்திருக்கு என்றவுடன் அருகில் இருந்தவள், நேத்து அட்மிசன் போட்டாங்களே அந்த பாட்டி தான் அவுங்களை நான் போயி கூட்டிட்டு வரேன்னு கிளம்பினாள்.

போன் பேசிட்டு வந்த லலிதா பாட்டி, தன் நண்பர்களுடம் மீண்டும் ஐக்கியமானாள். போன்ல யாரு? என்றாள் அருகில் இருந்த பத்மா பாட்டி.

என் மகன் தான் பேசினான். நம்ம கவர்மெண்ட்ல ஏழைகளுக்கான  காப்பீட்டு திட்டம்ன்னு ஒன்னு அறுவிச்சு இருக்காங்களாம்.அதுல என்னைய பதிய சொன்னான். அதுக்கு உதவியா அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கிற பையன அனுப்புரானாம். அவன் கொண்டு வர்ற பேப்பர்ல  கையெழுத்து போட்டாபோதும் . மித்த வேலைய அவன் பார்த்துக்குவனாம். இந்த பாலிசி எடுத்தா எந்த நோயா இருந்தாலும் இலவசமாம்.

அப்படியா? என்ற ஆச்சர்யத்துடன் அடுத்த விசாரிப்புக்கு சென்றாள் பத்மா பாட்டி.உன் மகன் என்ன பண்றான்? நீ ஏன் இங்க வந்தே? வீட்டுல எதுவும் சண்டையா? என அடுக்கி கொண்டே போனாள்.

பதில் சொல்ல ஆரம்பித்தாள் லலிதா பாட்டி.

என் மகன் பேரு ரவி.இப்ப பாம்பேயில  உள்ள ஒரு கம்பெனியில பெரிய ஆபிசரா இருக்கான். படிச்சு பெரியாளா வரணும்னு சொல்லி சொல்லி வளர்த்தேன். அதுக்காகதான் மெட்ராஸ்ல பெரிய ஸ்கூல்ல சேர்த்து  விட்டோம். ஹாஸ்டல்ல சேர்த்து விடும் போது அப்பா அம்மாவ விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு அழுதுட்டே இருப்பான். லீவு விட்டா போதும் உடனே வீட்டுக்கு வந்து விடுவான். எனக்கு கூட அவன எங்க ஊர்லயே படிக்கட்டும்னு நினைப்பு தான். ஆனால் என் வீட்டுகாரர் தான் கண்டிப்புடன் அங்கேயே தங்கி படிக்கட்டும்னு கறார சொல்லிட்டாரு.

அவனும் எங்க ஆசை படி படிப்புல கெட்டிகாரனா இருந்தான். நல்ல மார்க் எடுத்து அவன் ஆசை படியே பாம்பேயில பெரிய காலேஜ்ல சேர்ந்து படிச்சு வேலைக்கும் போக ஆரம்பித்தான். அவன் ஆசை பட்ட புள்ளயவே என் வீட்டுகாரர் கல்யாணம்  செய்து வைத்தார். அவனும் வேலையின் காரணமா பாம்பேயில செட்லாயிட்டான். எங்களையும் அவன் கூட வருமாறு கேட்டான். ஆனால் என் வீட்டுக்காரர்தான் பிறந்த ஊரை விட்டு வரமாட்டேன்னு இங்கேயே இருந்துட்டோம். சொந்தகாரவுங்கள்ள யாருக்காவது கல்யாணம்னா ஊருக்கு வந்து எங்களையும் பார்த்துட்டு போவான்... அவ்வளவுதான்.

கொஞ்ச நாள்ள என் வீட்டுக்காரரும் வாழ்ந்தது போதும்னு போயி சேர்ந்துட்டாரு. அவரு போனதுக்கப்புறம் நான் என் மகன்கூட பாம்பே போயிட்டேன். ரெண்டு மாசம் தான் இருந்தேன். அந்த ஊரும் அவிங்க பேசுற மொழியும் பிடிக்கலை. புரியவும் இல்லே.. எவ்வளோ நாள்தான் யாருக்கிட்டேயும் பேசாம ஊமையா இருக்குறது. அதனால தான் கிளம்பி ஊருக்கே வந்துட்டேன். தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு இந்த முதியோர் இல்லத்துல வந்து சேர்த்து விட்டான். நானும் சந்தோசமா வந்துட்டேன் என்றாள் ஒரு வித விரக்தியுடன்.


உன் மகனாவது இவ்வளோ பண்றானே ?  என் மகனும்தான் இருக்கானே என்று அவளுடைய கதைய சொல்ல ஆரம்பித்த்தாள் பத்மா பாட்டி.

Wednesday, October 19, 2011

ஹோட்டல் வசந்தம் (சவால் சிறுகதைப் போட்டி 2011)


பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில்,

                                  டேய் ! பார்த்தியா ரெண்டு வருசமா கட்டிக்கிட்டு இருந்தாங்கே இப்ப தான் முடுச்சுருக்காங்கே. சும்மா சாப்பிடறதுக்கே எவ்வளோ பெரிய HOTEL ன்னு அவனுடைய பிரமிப்பை பாண்டியிடம் கூறினான் சரவணன். இங்கே ஹோட்டல் மட்டும் இல்லேடா தங்குறதுக்கு room கூட இருக்கு என தனக்கு தெரிந்ததை கூறினான் பாண்டி.

கொட்டை எழுத்துல ஹோட்டல் ன்னு போட்டுருக்கு, நீ என்னமோ உள்ளே போயி பார்த்தமாதிரி சொல்றே - சரவணன்.
 நான்தான்  போனதில்லே ஆனா எங்கப்பா போயிருக்காருடா  - பாண்டி.

உங்கப்பா கட்டிடம் கட்டும் போது சித்தாள்வேலை பார்க்க  போனவரு, என்னமோ உங்கப்பா பெரிய பிஸ்தா மாதிரி பீத்திக்கிறே? இனிமேல் எல்லாம் உங்கப்பாவால உள்ளே போகமுடியாது தெரிஞ்சுக்க - சரவணன்.

எங்கப்பா நினைச்சா இப்ப கூட போகமுடியும் ,ஆனா அவரு தான் போகமாட்டேன்கிறாரு - பாண்டி .

ஏன் இன்னமும் செங்கல் பொறுக்க ஆள் கூப்புடுறங்களா! - சரவணன் 

உனக்காகவே நான் போயி காமிக்கிறேன். போயிட்டு வந்து உன்னை வச்சுக்கிறேன் என தன் வீட்டுக்கு வேகமாக கிளம்பினான்.வீட்டுக்கு போனதும் அப்பாவிடம் எப்படியாவது பேசி hotel க்குள் போயிட்டு வந்திரணும் என கங்கணம் கட்டிகொண்டான் பாண்டி.

நம்மளையெல்லாம் உள்ளே விடமாட்டங்கே ன்னு எவ்வளோ அதட்டி பார்த்தும் ,அடித்து பார்த்தும் பாண்டி கேட்கவில்லை. வேறு வழியின்றி கூட்டிபோவதாய் ஒப்புகொள்ள நேர்ந்தது சேகருக்கு. ஆம் பாண்டியின் அப்பா பெயர் சேகர். அவனுக்கும் போகவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்க்கு காரணம் பாண்டியின் அம்மா. கட்டிட வேலை செய்யும் போது அங்குதான் இறந்தாள். அவள் நினைவு தான் அவனை ஒப்புகொள்ள வைத்தது.

மறுநாள், 

        தங்களிடம் உள்ள நல்ல துணிகளை உடுத்தி இருவரும் hotel ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் விளையாடி கொண்டிருந்த சரவணனிடம் ஓடிப்போய் நாங்கள் hotel ஐ சுத்திபாக்க  போறோம்னு  பெருமையாய் சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் பாண்டி.

ஹோட்டல் வாசலில்,

                 செக்யூரட்டியாய் உருமாறி இருந்த மணி அண்ணனிடம் தன் மகனின் ஆசைக்காக உள்ளே போயி பார்த்துட்டு வந்துடுறோம் என்றான் சேகர். 

ஓ! அதுக்குதான் இப்படி டிப் டாப்பா டிரஸ் போட்டுட்டு வந்திருக்கியாக்கும் .பேருக்குதான் open பண்ணியிருக்காங்க ஆனா உள்ளே வேலை நடந்துக்கிட்டு தான் இருக்கு.போயி மேனேஜரை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிரு என்றார் மணி அண்ணன்.

உள்ளே போனதும் பழைய ஞாபகங்கள் அவனை வாட்ட ஆரம்பித்தன. இந்த இடத்தில் தான் அதுவரை அவன் அடைந்த அனைத்து சந்தோசங்களையும் இழந்தான்.பாண்டிக்கோ சந்தோசத்தில் கால்கள் சக்கரமாய் சுழல ஆரம்பித்தன.

யாரோ தன்னை தட்டுவதை உணர்ந்து திரும்பி பார்த்தான் சேகர். அதுவேருயாருமில்ல மேனேஜெர் விஷ்ணு தான். ஒருவித பயத்துடனும்,மரியாதையுடனும்  வந்த காரணத்தை கூறினான் சேகர்.

இந்தமாதிரி இடத்துக்கு வரும் போது நல்ல dress போட்டுட்டுவரனும்னு தெரியாது. சரி!சரி! பார்த்துட்டு போ இனிமே இந்தமாதிரி அடிக்கடி வராதே என கண்டிப்புடன் கூறிவிட்டு வேகமாக சென்றான் விஷ்ணு. 

சேகரோ அவன் போகும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான்.ஏன்னா அவன் மனைவி தவறி விழுந்ததாய் சொல்லும் இடத்தில் விஷ்ணு மட்டுமே நின்றுகொண்டிருந்தான். அவனிடம் கேட்க தெம்பு இல்லாமல் இன்றுவரை முழுங்கிகொண்டே இருக்கான். 

வேகமாய் சென்ற விஷ்ணு திரும்பி வந்து சேகரிடம், ஒரு துண்டுகாகிதத்தை கொடுத்து பத்தாவது மடியில் உள்ள ஹோட்டல் முதலாளியிடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்றான். அந்த மாடியில் இருந்து தான் தன் மனைவியை இழந்தான் சேகர்.

பாண்டியோ அங்கெ உள்ள செயற்கை நீரூற்றுகளை பார்த்து விளையடிகொண்டிருந்தான். அங்கேயே விளையாடி கொண்டிருக்குமாரும் ,அப்பா பத்து நிமிசத்தில் வந்துடறேன்னு கிளம்பினான் சேகர்.  சேகருக்கோ ஹோட்டல் முதலாளியை ஒருமுறை பார்த்ததாக ஞாபகம். தம்மிடம் ஏன் இந்த சீட்டை கொடுக்கவேண்டும் என தனக்குள்ளே கேள்வி கேட்டு கொண்டே சென்றான். சேகருக்கோ விஷ்ணு மீது  நல்ல அபிப்பராயம் கிடையாது.

இந்த hotel முதலாளியும்,S.P.கோகுலும் மறைமுகமாக மூன்றாம் தர தொழில் செய்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் கடத்தல் பொருள்களையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தையும் ஹோட்டல் லில் தான் பதுக்கி வைப்பார்கள்.

அதைத்தான் ஹோட்டல் முதலாளி கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தார்.

இரண்டு  நாட்கள் கழித்து  பதுக்கி வைக்கப்பட்ட அறையின் குறியீட்டு எண்ணை விஷ்ணு என்பவர் மூலமாக தெரிவிப்பதாக கூறினார். விஷ்ணுவின் செல்பேசி எண்ணை வாங்கி Vishnu informer என குறித்து வைத்து கொண்டார்.


ஹோட்டல் முதலாளி சொன்னதுபோலவே ரகசிய குறியீட்டு எண்ணை வேறொரு ஆள் மூலமாக விஷ்ணு அனுப்பி வைத்தான்.

அதில்

 Mr.கோகுல்,

S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.



-விஷ்ணு.

 ஆனால் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஹோட்டலுக்கு யாருக்கும் தெரியாமல் வந்தார் S.P.கோகுல் . அந்த சமயத்தில் ஹோட்டல் முதலாளியின் ரூமுக்குள் வேகமா உள்ளே நுழைந்தார். ரூமுக்குள் யாரும் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருக்கும் போதுதான் சேகர் துண்டு சீட்டுடன் உள்ளே நுழைந்தான். ஹோட்டல் முதலாளி என நினைத்து துண்டுசீட்டினை S.P.கோகுலிடம் கொடுத்தான் சேகர்.  அதில் 

Sir,

எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.


-விஷ்ணு 

அந்த காகிதத்தை கொடுத்துவிட்டு சேகரும் ,பாண்டியும் அளவில்லா சந்தோசத்துடன் வெளியேறினார்கள் இனி நடக்க இருக்கும் களேபரம் தெரியாமல்.

தான் நினைத்தது போலவே ஹோட்டல் முதலாளியும், விஷ்ணுவும் ஏதோ சதி செய்வதை உறுதிபடுத்தி கொண்டார் S.P.கோகுல் . அச்சமயத்தில், அவரே எதிர்பாராத வண்ணம் விஷ்ணுவிடம் இருந்து போன் கால். போன் காலை  கோபத்துடன் வெறித்து பார்த்துக்கொண்டே எடுத்தார்.





போன் காலில், தான் கொடுத்தது பொய்யான குறியீடு எனவும், உண்மையான ரகசிய குறியீடு வேண்டுமானால் ...... என பேரம் பேச ஆரம்பித்தான் விஷ்ணு .





Thursday, January 20, 2011

பரதேசியும்! ஒரு தேசியும் !

                                 நிராயுதபாநியானால்
                                 எல்லோரும் விட்டுவிட்டு
                                 செல்வார்கள் - என்னை
                                 தொட்டுவிட்டு சென்றார்கள்
                                 படிப்பிற்கு விலைபோகாவிடினும்
                                 என் சதைபிடிப்பிற்க்கு
                                 விலையானேன்.
                                                               - மஞ்சுளா.


ஹலோ! மஞ்சுளா நான்தான் பாண்டி பேசுறேன்.
எங்கே இருக்கே?
வீட்டுலதான் இருக்கேன். இன்னைக்குதான் இந்தபக்கம் கண்ணு தெரிஞ்சதாக்கும். ஏன் வீட்ல யாரும் இல்லையோ? என்றாள் மஞ்சுளா.(செல்லமாக மஞ்சு)
என் பொண்டாட்டி அவ ஸ்கூல் பசங்கள கூட்டிட்டு டூர் போயிருக்கா. நானும் என் மகளும் தான்  இருக்கோம்.ரெம்போ நாளா உன் நினைப்புதான். இன்னைக்குதான் நேரம் கிட்டுச்சு என்று இளித்தான் பாண்டி.

அதானே பார்த்தேன் வீட்ல யாரும் இல்லேட்ட தானே என் நினைப்பு வரும். ஆன எனக்கு 5 மணிக்கு மேல வேற வேலை இருக்கு,அதனால நாளைக்கு வா என்றாள் மஞ்சு.

நாளைக்கா?  என் பொண்டாட்டியே வந்துடுவா. அதுனால இன்னைக்கே வர்றேன். 5 மணிக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு அதுக்குள்ள என்று கெஞ்ச ஆரம்பித்தான் பாண்டி.

சரி வா! அஞ்சு மணிக்குள்ள நீ கிளம்பிடனும். வரும் போது ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டும், அரை லிட்டர் பாலும் வாங்கிட்டு வா என்றாள் மஞ்சு.

அடுத்த பத்தாவது நிமிடத்தில்,

வெளியில் யாரும் பார்க்காமல் இருக்கா வேண்டும் என்ற படபடப்பிலும், மஞ்சு வீட்டிற்குள் வந்துவிட்ட பரபரப்பிலும் மஞ்சு மீது பாய ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்குள் ஊதுபத்தி சாம்பல் போல் சோர்ந்து கிடந்தான் பாண்டி.





களைந்த ஆடையை சரிசெய்துவிட்டு, வேகமா கிளம்புங்கள் என்றாள் மஞ்சு.
என்னது?  கிளம்புறதா!. இதுக்காகத்தான் என்  குழந்தைய  கூட  பக்கத்துவீட்லே விட்டுட்டு வந்துருக்கேன். இன்னைக்கு ரெண்டு மூணு வாட்டியாவது பண்ணாம விடமாட்டேன் என்று அடம்பிடித்தான் பாண்டி.

இம்புட்டு ஆசை இருக்கிறவன் வெள்ளன வந்துருக்கணும். இப்போவந்து போகாம அடம்புடிச்சா? . அஞ்சு மணிக்குள்ள போயிடுவேன்னு நீ சொன்னதாலதான் உன்னைய வர சொன்னேன்.இப்படி வந்துட்டு ஏமாத்துனே??????  என்று கோபமாக பார்த்தாள் மஞ்சுளா.

சரி!சரி! இதைமட்டுமாவது செய் என்று அவனது சிற்றின்பத்தை நிறைவேற்றி கொண்டான்  பாண்டி. அவனது இச்சை முடிந்தவுடன் களைந்த ஆடைகளை சரிசெய்துவிட்டு அவளின் வரலாறை விசாரித்தான் பாண்டி.

ரெம்போ நாளா உன்கிட்ட  கேக்கனும்னு நினைச்சேன், நீ எப்படி இந்த தொழிலுக்கு  வந்தே என்றான் பாண்டி.

அத ஏன் கேக்குறே? என் வாழ்க்கைய  நானே தொலைச்சுட்டேன்.
என்னைய என் வீட்டுல வசதியாகத்தான் வளர்த்து கல்யாணமும் செஞ்சு வச்சாங்க. அவரும் என்னைய ராணிமாதிரி பர்த்துகிட்டாறு. வேலைன்னா மாடா உழைப்பாரு. என் மேல கொள்ளபிரியம்.ரெம்போ பாசமாகத்தான் இருந்தாரு.அந்த பாசம் மனசுக்குதானே. உடம்புக்கு இல்லேயே.......
ஒத்த புள்ள போதும்னு என்ன்ன தொடாம விட்டுட்டாரு.

உடம்புசூடு தாங்காம பக்கத்துவீட்டுகாரன் தொந்தரவுக்கு சம்மதிச்சுட்டேன். அன்னைக்கோட என் வாழ்கையவே குழிதோண்டி புதச்சுட்டேன். அவருக்கு போயி துரோகம் பண்ணிட்டோமேன்னு நானே என்னைய கேவலமா திட்டினேன். அவன்கூட படுத்தது எப்படியோ தெரிஞ்சு போயி என்கிட்டே வந்து கோபமா கேட்டாரு.. நானும் அவரு கால்ல  விழுந்து, தெரியாம பண்ணிட்டேன்னு கதறுனேன். நான் அவருக்கு பண்ணுன துரோகத்த மனசுல வச்சுகிட்டே போனவரு ஆக்சிட்டேன்டாயி வெறும் உடம்பாத்தான் வந்தாரு.

அவரு போயி கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பக்கத்து வீட்டுக்காரன் அவன் சபலத்துக்கு என்னைய கூப்பிட்டான். என் மனசும் உடம்பும் கேக்காட்டியும் என் குழந்த வயிறு கேட்டுச்சே சோத்த! அதுனால என் உடம்ப வித்து என் புள்ளைக்கு சோறுபோட ஆரம்பிச்சேன். அவன் மூலமா உன்னைய மாதிரி அவன் கூட்டாளிகளும் வர இப்படி தெருநாயா நிக்கிறேன் என்றாள் மஞ்சுளா.

அதற்குள் அவள் கண்களில் வடிந்த கண்ணீர் அவளது மார்பகத்தை நனைத்துவிட்டிருந்தது.

அவனோ தரையையே பார்த்துகொண்டிருந்தான்...........

நான் இப்போகூட என் மாகாண ஸ்கூல்ல இருந்து கூப்பிடத்தான் போறேன். காலைல உன்னைய மாதிரி எத்தனபேருட்ட படுத்தாலும், சாயங்காலம் அஞ்சு மணியிலே இருந்து என் மகன் கூட இருக்கிறதுதான் சுகமே. அதனால்தான் உன்னைய கிளம்புன்னு  சொன்னேன். என்றாள் மஞ்சுளா.

தன்னுடன் படுத்ததற்கான கூலியை மேஜையின் மீது வைத்துவிட்டு தான் மகளை பார்க்க சென்றான் பாண்டி ஒரு வித அவமானத்துடன்.




"மறக்காம பின்னூட்டம் இடவும்! ஓட்டையும் சேர்த்து அமுக்கிட்டு போங்க."

Monday, January 10, 2011

காதல் கண்ணாடி

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
                                                                                      - பாரதி
 
காதல் என்பது மற்றவர்களுக்கு பல அர்த்தங்களில் தெரியும். ஆனால் காதலர்களுக்கு ஒரே அர்த்தம் தான். அது வெவ்வேறு உணர்வுகளில் அன்பு என்ற மையத்தில்தான் முடியும்.
                    ஹாய்! எப்படி இருக்கே என்று கிருஷ்ணனின் குரல் கேட்டதும் கமலாவால் வேறெதுவும் பேச வாய்ப்பில்லை. அவனுடன் குலைந்து பேசுவதை தவிர. அதுவும் வீட்டிற்கு தெரியாமல் பீச்சுக்கு வர சொன்னதை தட்டவும் முடியவில்லை.மறுக்கவும் முடியவில்லை. அவன் சொன்ன டையத்துக்கு வருகிறேன் என்று பதில் சொல்லத்தான் முடிந்தது.
                               அவன் சொன்னது போல் தேனாம்பேட்டை சிக்னலில் காத்திருந்தாள். அவன் சொன்ன டையத்தையும் மீறி தாமதமாக வந்தான் கிருஷ்ணன். இருவரும் சந்தித்த பின் பைக்கில் யாருக்கும் தெரியாமல் துப்பட்டாவை மூடியவாறு சென்றாள் கமலா.
                   நமக்கு கல்யாணம் ஆனபின் இருவரும் வாரா வாரம் பீச்சுக்கு போக வேண்டும்.உனக்கு வேறெங்கும் போக வேண்டும் என்று தோன்றுகிறதா? என்றவாறு பல கேள்விகளை கேட்டுகொண்டே சென்றான். எதற்கும் நெருக்கம் காண்பிக்காமல் அமைதியாய் வந்ததை உணர்ந்த கிருஷ்ணன், ஏன் என்னாயிற்று? என்றான். திடுக்கிட்ட கமலாவோ ஒன்றுமில்லை வேறு யாராவது பார்த்து விடுவங்களோ என்ற பயத்தினால்தான் சரியாய் கவனிக்கவில்லை என்று மழுப்பினாள்.அவள் மலுப்பியதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.அவளும் சில காலம் பின்நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

    அதே சிக்னலில் கண்ணன், கமலா வருவாள் என்று நீண்ட நேரம் காத்திருப்பான்.ஆனால் அவனை காத்திருக்க வைப்பதில் என்னதான் சுகமோ தினமும் தாமதமாகத்தான் வருவாள். அன்றும் அவ்வாறே நடந்தது. அவள் பைக்கில் ஏறியதுதான் தாமதம்,வண்டி டாப் கியரில் பறக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு அருகில் ஒரு தம்பதியினர் தான் குழந்தைகளோடு சென்றதை பார்த்து கண்ணனின் காதில் எதோ கிசுகிசுத்து கொண்டே பீச்சுக்குள் சென்றனர். அந்த கடலோர புதைமணலில் நடைபயிலும் குழந்தை போல மெதுவாக சென்றனர்.அந்த மிக பெரிய மணற்பரப்பில் ஒரு ஓரமாய் பதுங்கி கொண்டனர். தெருநாய்கள் கூட சுதந்திரமாக காதலிக்கையில் நாம மட்டும் பதுங்க வேண்டியிருக்கிறதே என்று சலித்து கொண்டான் கண்ணன். காதல் பேச்சுக்கள் அந்த கடல் அளவையும்  தாண்டிசென்றது.                                        சிறிது நேரத்திற்கு பின், நேரமாகிவிட்டது கிளம்பலாம்,நேற்றும் வீட்டுக்கு லேட்டாதான் போனேன். இன்னைக்கும் போன எங்கப்பா தொலைத்து விடுவார் என்று கிளம்புவதிலே குறியை இருந்தாள் கமலா.

                                   மனதில் ஒருவித நடுக்கத்துடனே வீட்டிற்கு புறப்பட்டாள்.நடுக்கத்துக்கு காரணம் அவளின் பக்கத்து வீட்டுகாரர் பார்த்ததுதான். வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதம் அவளின் அப்பா கோபத்தில் அடிக்க முனைந்தார். தெருநாய் மாதிரி ரோட்டில திரியிறேன்னு  அவளின் அம்மாவும் தன் பங்குக்கு வசை பாட ஆரம்பித்தாள்.

  நான் அவரைத்தான் காதலிக்கிறேன்,அவரையே கல்யாணம் செய்துவைங்கன்னு எவ்வளோ கெஞ்சினாள். ஆனால் தன் மகள் விலைமகளாகி விட்டதை போல எண்ணி புலம்ப ஆரம்பித்தனர்..........................................................................................
.........
.........!
.........?
 இறுதியா நான் சொல்லும் மாப்பிள்ளைய செய்யாவிடில் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர். அதிர்ச்சி!அழுகை!ஏமாற்றம் என விரக்தி அடைந்தாள் கமலா.
.......
......
ஓரிரு வாரங்களுக்கு பிறகு கமலாவை பெண்பார்க்க வந்தனர் கிருஷ்ணனின் குடும்பத்தார்.அவளின் கன்னித்தன்மை இவர்கூட தான் கழிய வேண்டும் என்று கமலாவின் பெற்றோர்கள் முடிவு செய்திருந்ததால் எல்லாம் சுபமாக முடிந்தது.

சீறிட்டு வந்த பைக் பீச்சில் சர்ரென நின்றது. கமலாவும் தன் சுயநினைவுக்கு வந்தாள். என்னிடம் பேசுவதற்கு பயமா இருக்கா? இல்லே கூச்சமா இருக்கா? என காதல் மொழி பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்............
...............
...............
கிருஷ்ணனிடம் வேண்டா வெறுப்பாய் உரையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள் கமலா. அங்கு வீட்டிற்குள், காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற விவாதத்தை அவளது பெற்றோர்கள் ரசித்து பார்த்துகொண்டிருந்தனர்.