Thursday, January 20, 2011

பரதேசியும்! ஒரு தேசியும் !

                                 நிராயுதபாநியானால்
                                 எல்லோரும் விட்டுவிட்டு
                                 செல்வார்கள் - என்னை
                                 தொட்டுவிட்டு சென்றார்கள்
                                 படிப்பிற்கு விலைபோகாவிடினும்
                                 என் சதைபிடிப்பிற்க்கு
                                 விலையானேன்.
                                                               - மஞ்சுளா.


ஹலோ! மஞ்சுளா நான்தான் பாண்டி பேசுறேன்.
எங்கே இருக்கே?
வீட்டுலதான் இருக்கேன். இன்னைக்குதான் இந்தபக்கம் கண்ணு தெரிஞ்சதாக்கும். ஏன் வீட்ல யாரும் இல்லையோ? என்றாள் மஞ்சுளா.(செல்லமாக மஞ்சு)
என் பொண்டாட்டி அவ ஸ்கூல் பசங்கள கூட்டிட்டு டூர் போயிருக்கா. நானும் என் மகளும் தான்  இருக்கோம்.ரெம்போ நாளா உன் நினைப்புதான். இன்னைக்குதான் நேரம் கிட்டுச்சு என்று இளித்தான் பாண்டி.

அதானே பார்த்தேன் வீட்ல யாரும் இல்லேட்ட தானே என் நினைப்பு வரும். ஆன எனக்கு 5 மணிக்கு மேல வேற வேலை இருக்கு,அதனால நாளைக்கு வா என்றாள் மஞ்சு.

நாளைக்கா?  என் பொண்டாட்டியே வந்துடுவா. அதுனால இன்னைக்கே வர்றேன். 5 மணிக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு அதுக்குள்ள என்று கெஞ்ச ஆரம்பித்தான் பாண்டி.

சரி வா! அஞ்சு மணிக்குள்ள நீ கிளம்பிடனும். வரும் போது ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டும், அரை லிட்டர் பாலும் வாங்கிட்டு வா என்றாள் மஞ்சு.

அடுத்த பத்தாவது நிமிடத்தில்,

வெளியில் யாரும் பார்க்காமல் இருக்கா வேண்டும் என்ற படபடப்பிலும், மஞ்சு வீட்டிற்குள் வந்துவிட்ட பரபரப்பிலும் மஞ்சு மீது பாய ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்குள் ஊதுபத்தி சாம்பல் போல் சோர்ந்து கிடந்தான் பாண்டி.





களைந்த ஆடையை சரிசெய்துவிட்டு, வேகமா கிளம்புங்கள் என்றாள் மஞ்சு.
என்னது?  கிளம்புறதா!. இதுக்காகத்தான் என்  குழந்தைய  கூட  பக்கத்துவீட்லே விட்டுட்டு வந்துருக்கேன். இன்னைக்கு ரெண்டு மூணு வாட்டியாவது பண்ணாம விடமாட்டேன் என்று அடம்பிடித்தான் பாண்டி.

இம்புட்டு ஆசை இருக்கிறவன் வெள்ளன வந்துருக்கணும். இப்போவந்து போகாம அடம்புடிச்சா? . அஞ்சு மணிக்குள்ள போயிடுவேன்னு நீ சொன்னதாலதான் உன்னைய வர சொன்னேன்.இப்படி வந்துட்டு ஏமாத்துனே??????  என்று கோபமாக பார்த்தாள் மஞ்சுளா.

சரி!சரி! இதைமட்டுமாவது செய் என்று அவனது சிற்றின்பத்தை நிறைவேற்றி கொண்டான்  பாண்டி. அவனது இச்சை முடிந்தவுடன் களைந்த ஆடைகளை சரிசெய்துவிட்டு அவளின் வரலாறை விசாரித்தான் பாண்டி.

ரெம்போ நாளா உன்கிட்ட  கேக்கனும்னு நினைச்சேன், நீ எப்படி இந்த தொழிலுக்கு  வந்தே என்றான் பாண்டி.

அத ஏன் கேக்குறே? என் வாழ்க்கைய  நானே தொலைச்சுட்டேன்.
என்னைய என் வீட்டுல வசதியாகத்தான் வளர்த்து கல்யாணமும் செஞ்சு வச்சாங்க. அவரும் என்னைய ராணிமாதிரி பர்த்துகிட்டாறு. வேலைன்னா மாடா உழைப்பாரு. என் மேல கொள்ளபிரியம்.ரெம்போ பாசமாகத்தான் இருந்தாரு.அந்த பாசம் மனசுக்குதானே. உடம்புக்கு இல்லேயே.......
ஒத்த புள்ள போதும்னு என்ன்ன தொடாம விட்டுட்டாரு.

உடம்புசூடு தாங்காம பக்கத்துவீட்டுகாரன் தொந்தரவுக்கு சம்மதிச்சுட்டேன். அன்னைக்கோட என் வாழ்கையவே குழிதோண்டி புதச்சுட்டேன். அவருக்கு போயி துரோகம் பண்ணிட்டோமேன்னு நானே என்னைய கேவலமா திட்டினேன். அவன்கூட படுத்தது எப்படியோ தெரிஞ்சு போயி என்கிட்டே வந்து கோபமா கேட்டாரு.. நானும் அவரு கால்ல  விழுந்து, தெரியாம பண்ணிட்டேன்னு கதறுனேன். நான் அவருக்கு பண்ணுன துரோகத்த மனசுல வச்சுகிட்டே போனவரு ஆக்சிட்டேன்டாயி வெறும் உடம்பாத்தான் வந்தாரு.

அவரு போயி கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பக்கத்து வீட்டுக்காரன் அவன் சபலத்துக்கு என்னைய கூப்பிட்டான். என் மனசும் உடம்பும் கேக்காட்டியும் என் குழந்த வயிறு கேட்டுச்சே சோத்த! அதுனால என் உடம்ப வித்து என் புள்ளைக்கு சோறுபோட ஆரம்பிச்சேன். அவன் மூலமா உன்னைய மாதிரி அவன் கூட்டாளிகளும் வர இப்படி தெருநாயா நிக்கிறேன் என்றாள் மஞ்சுளா.

அதற்குள் அவள் கண்களில் வடிந்த கண்ணீர் அவளது மார்பகத்தை நனைத்துவிட்டிருந்தது.

அவனோ தரையையே பார்த்துகொண்டிருந்தான்...........

நான் இப்போகூட என் மாகாண ஸ்கூல்ல இருந்து கூப்பிடத்தான் போறேன். காலைல உன்னைய மாதிரி எத்தனபேருட்ட படுத்தாலும், சாயங்காலம் அஞ்சு மணியிலே இருந்து என் மகன் கூட இருக்கிறதுதான் சுகமே. அதனால்தான் உன்னைய கிளம்புன்னு  சொன்னேன். என்றாள் மஞ்சுளா.

தன்னுடன் படுத்ததற்கான கூலியை மேஜையின் மீது வைத்துவிட்டு தான் மகளை பார்க்க சென்றான் பாண்டி ஒரு வித அவமானத்துடன்.




"மறக்காம பின்னூட்டம் இடவும்! ஓட்டையும் சேர்த்து அமுக்கிட்டு போங்க."

4 comments:

Anonymous said...

super

மனிதன் said...

சில நொடி தடுமாற்றங்கள் வாழ்க்கையின் சாபக்கேடாக முடியும்.........சமீப காலங்களில் மானத்தை விற்பவர்கள்(தாசிகள்,நடிகைகள் மற்றும் இன்னும் சிலர்)நல்லவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் ஏனென்று கேட்டால் அது அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில் அப்படி என்று பதில் கூறுகிறார்கள்...வயிற்று பிழைப்புக்காக மானத்தை விற்பது தவறில்லை என்றால்திருடுவது,கொள்ளை அடிப்பது என்று எதுவுமே உலகில் தவறில்லை என்று தானே அர்த்தம்....

இன்று நம் சமுதாயம் சினிமா இழுத்துச் செல்லும் சீரழிவு பாதையில்....

Unknown said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

கா.வீரா said...

நனைந்தது மஞ்சுளாவின் மார்பு மட்டுமல்ல..

என்னுடடைய கண்களும்தான்..


நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com

:a: :b: :c: :d: :e: :f: :g: :h: :i: :j: :k: :l: :m: :n:

Post a Comment